தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
- இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு படித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- Junior Assistant, Ticket Seller, Security Guard, Thiruvilaku, Multiple Worker, Evalar மற்றும் Sweeper ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு எழுத்த படிக்க தெரிந்திருந்தால் போதுமானதாகும்.
- 15.07.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருப்பது அவசியமாகும்.
- மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.7,950/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.