
இனி இலவச சேவைகள் எதுவும் கிடையாது.. அரசு வங்கி முதல் தனியார் வங்கி வரை.. விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய விதிகள்..
சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பலர் தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாக்க வங்கிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும், தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் வசதிகளில் வங்கிகள் அவ்வப்போது சில விதி மாற்றங்கள் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பல வங்கி நிறுவனங்கள் தங்களது விதிகளை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Largest to Smallest States in India list Tamil – Free PDF Download
அதாவது, “ஏப்ரல் 1 முதல் சேமிப்புக் கணக்குகள், ATM பயன்பாடு மற்றும் கிரெடிட் கார்டு செயல்பாடுகளை பாதிக்கும் விதி மாற்றங்கள் ஏற்படவுள்ளது”. அவற்றில் முதலாவதாக “SBI வங்கியில் பயனாளரின் டிக்கெட் வவுச்சர் அதாவது விஸ்டாரா கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய மைல்ஸ்டோன் நன்மைகளை வங்கி நிறுத்த உள்ளது. மேலும், SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை, கணக்கு வைத்திருப்பவரின் வட்டாரத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்” என கூறப்படுகிறது. இதனுடன் “சேமிப்புக் கணக்குகள் மற்றும் FD-களுக்கான வட்டி விகிதங்கள் சீரமைக்கப்படும் என்றும், AI மூலம் இயங்கும் ஆன்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகவும் மற்றும் அவர்களின் பரிவர்த்தனைகளை தடையேற்றதாக நடைபெற உதவும் வகையில் தொழில்நுட்பம் மேம்பாடு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























