RRB ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன்!
Railway Recruitment Board எனப்படும் RRB வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Assistant Loco Pilot பணிக்கென காலியாக உள்ள 9970 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Assistant Loco Pilot(ALP) பணிக்கென காலியாக உள்ள 9970 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Any Graduate, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.90,000/- || உடனே விரையுங்கள்!
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு RRB- ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஏப்ரல் 10 தொடங்கி மே 9 உடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

























