ஆசிரியர்கள் உடை குறித்த அரசின் ஆணை என்ன? – குழப்பத்தில் பள்ளி நிர்வாகங்கள்!

0
ஆசிரியர்கள் உடை குறித்த அரசின் ஆணை என்ன? - குழப்பத்தில் பள்ளி நிர்வாகங்கள்!
ஆசிரியர்கள் உடை குறித்த அரசின் ஆணை என்ன? - குழப்பத்தில் பள்ளி நிர்வாகங்கள்!
ஆசிரியர்கள் உடை குறித்த அரசின் ஆணை என்ன? – குழப்பத்தில் பள்ளி நிர்வாகங்கள்!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான உடை குறித்த தமிழக அரசின் ஆணை என்ன என்பது குறித்து தற்போது பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.

அரசின் ஆணை:

தமிழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் அனைவருமே பணிக்கு புடவை மட்டுமே கட்டி செல்கின்றனர். சிலருக்கு இது அசவுகரியத்தை ஏற்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இது போன்றவர்களுக்காக தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை எண் 67 ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் பணிக்கு சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும், ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரியத்தின் படி வேட்டி சட்டை, சாதாரண பேண்ட், சட்டை போன்ற தங்களுக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு குறித்து பலருக்கும் தெரியாத நிலை நீடித்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு உயரும் ஊதியம் – கூடுதலாக ரூ. 25,000 ஊக்கத்தொகை.. அறிவிப்பு வெளியீடு!

இருப்பினும் ஒரு சிலர் இது குறித்து தெரிந்து சல்வார் கமீஸ் போன்ற உடைகளை அணிந்து செல்லும் போது பள்ளி நிர்வாகங்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியர்களை கண்டிக்கும் நிலை உள்ளது. இதனால் ஆசிரியர்கள் உடை குறித்து தமிழக அரசு தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஆடை குறித்தான அரசின் அறிவிப்புகள் குறித்து அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தற்போது தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!