தமிழக பள்ளி திறப்பு எதிரொலி… சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளி திறப்பு ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஏழை குடும்பங்களுக்கு இலவச அதிவேக இணைய சேவை – அரசின் புதிய அறிமுகம்!
இந்நிலையில், வெளியூர் சென்று சொந்த ஊருக்கு திரும்பும் பெற்றோர்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதன் காரணமாக மீண்டும் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது, ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் இன்று, நாளை மற்றும் ஜூன் 11ஆம் தேதி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.