ஏழை குடும்பங்களுக்கு இலவச அதிவேக இணைய சேவை – அரசின் புதிய அறிமுகம்!
கேரள அரசு தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க் என்கிற திட்டத்தின் மூலமாக ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலவச இணைய சேவை:
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தனியார் மற்றும் மத்திய அரசின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் தடையற்ற இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டிலேயே முதன் முறையாக கேரள அரசு “கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்” என்கிற டெலிகாம் சேவையை கடந்த ஜூன் 6 ஆம் தேதி அறிமுகம் செய்திருக்கிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதாவது, இந்த டெலிகாம் சேவை திட்டத்தின் மூலமாக மாநிலத்தில் பின்தங்கிய 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற சாதாரணமான வாடிக்கையாளர்களுக்கு ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களை காட்டிலும் குறைவான விலையில் அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
TNPSC சிவில் நீதிபதி தேர்வு – தகுதிகள் என்ன? மாணவர்களின் முக்கிய கோரிக்கை!
மாநிலம் முழுவதும் தற்போது வரைக்கும் 17,412 அரசு அலுவலகம் மற்றும் 9000 வீடுகளுக்கு இந்த கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க் சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 Mbps வேகத்தில் 3000gb டேட்டா மாதத்திற்கு ரூ.299க்கும், 6 மாதத்திற்கு ரூ.1794க்கும் வழங்கப்படுகிறது. மேலும், 30 Mbps வேகத்தில் 3000gb டேட்டா மாதத்திற்கு ரூ.349க்கும், 6 மாதத்திற்கு ரூ.2094க்கும், 40 Mbps வேகத்தில் 4000gb டேட்டா மாதத்திற்கு ரூ.399க்கும், 6 மாதத்திற்கு ரூ.2394க்கும் வழங்கப்படுகிறது. மேலும், இது போன்ற எக்கச்சக்கமான திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்திருக்கிறது.