தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை – முதல்வர் இன்று (ஜூன் 26) ஆலோசனை!

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை - முதல்வர் இன்று (ஜூன் 26) ஆலோசனை!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை - முதல்வர் இன்று (ஜூன் 26) ஆலோசனை!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை – முதல்வர் இன்று (ஜூன் 26) ஆலோசனை!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 26) ஆலோசனை மேற்கொள்கிறார்.

பெண்களுக்கு உரிமைத்தொகை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உரிமைத்தொகை குறித்து நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இது எப்படி வழங்கப்படும், ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுமா அல்லது தபால் அலுவலகம் மூலமாக வழங்கப்படுமா? யாருக்கெல்லாம் வழங்கப்படும்? என மக்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.

NABARD NABFINS-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

அது மட்டுமில்லாமல் அரசு இது குறித்து எந்த விளக்கமும் வெளியிடாமல் இருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு அமைச்சர்களுடன் நடைபெற இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!