சாமி நகைகளை கண்டுபிடித்த சந்தியா, பரிகாரம் செய்ய சொன்ன சாமியார் – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜா ராணி 2” மகா சங்கமம் சீரியலில் சாமியார் சந்தியா குடும்பத்தினர் நகையை திருடியதாக சாமியார் சொன்னதை அடுத்து ஊர் மக்கள் குடும்பத்தை ஒத்துக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் சாமியார் குடும்பத்து பெண்களுக்கு பரிகாரம் சொல்ல அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மகா சங்கமம்:
மகா சங்கமம் சீரியலில் சந்தியா சாமியார் போலியானவர் என தெரிந்து கோர்ட்டில் கேஸ் கொடுத்து இருக்கிறார். அதனால் கோவப்பட்ட சாமியார் சந்தியா குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறார். அந்த நேரம் சென்னையில் இருந்து பாரதியும் கண்ணம்மாவும் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சாமியார், சிவகாமி சாமியின் நகையை திருடியதாக சொல்ல அதை ஊர் மக்கள் நம்பிவிடுகின்றனர். சாமியார் கோர்ட் கேஸை வாபஸ் வாங்க வேண்டும் இல்லை என்றால் ஊரை விட்டு குடும்பத்தை ஒதுக்கி வைத்து விடுவேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. கரண்ட்டை கூட கட் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் சந்தியா, சரவணன், பாரதி மற்றும் கண்ணம்மா உடன் இணைந்து சுடு தண்ணீர் வைக்கின்றனர். அப்போது அர்ச்சனா செய்து வைத்திருந்த மாட்டு சாணத்தை எடுத்து எரிகின்றனர். அதில் சாமியின் நகைகள் இருக்கிறது. அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் சாமியாரை சந்தித்து மன்னிப்பு கேட்க பார்வதி செல்ல அப்போது சாமியார் பார்வதியிடம் தவறாக நடந்து கொள்கிறார். அதனால் பார்வதி சாமியாரை அடித்துவிடுகிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரம், தண்டோரா மூலம் எச்சரிக்கை – பொருட்களை மீண்டும் ஒப்படைத்த பொதுமக்கள்!
அதனால் கோவப்பட்ட சாமியார் ஊர் மக்களை அனுப்பி குடும்பத்தை முற்றுகையிடுகின்றனர். பின் சாமியார் அந்த ஊரை சேர்ந்த 3 பெண்கள் இன்று உடல் முழுவதும் மஞ்சள் தண்ணீர் ஊற்றி ஊரை சுற்றி வர வேண்டும். மேலும் கோவில் கட்ட கூடாது என கோர்ட்டில் போட்ட கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என உத்தரவிடுகிறார். அது படி பார்வதி, சந்தியா, கண்ணம்மா அந்த பரிகாரத்தை செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.