10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கான ரயில்வே துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ!
இந்தியாவில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் சேர்ப்பு:
இந்தியாவில் தற்போது அதிகரிக்கும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். வேலையினால் கிடைக்க கூடிய மாத ஊதியம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளையும் பொருட்களை கூட வாங்கி முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கத் தொடங்கியதும் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலையத் தொடங்கினர்.
Exams Daily Mobile App Download
இவர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதனை நிரப்பும் பொருட்டு ஆட்களை தேர்வு செய்ய போட்டித்தேர்வுகளும் நிரப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகள், பட்டறைகள் ஆகியவற்றில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு மொத்தம் 465 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – எப்படி சரிபார்ப்பது? முழு விவரங்கள் இதோ!
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பை முதலில் சரிபார்த்து கொள்ள வேண்டும். பிறகு இதில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.