தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – 18ஆம் தேதிக்கு பின் பள்ளிக்கு வரவேண்டியதில்லை! முக்கிய அறிக்கை!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி தேர்ச்சி முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் மாணவர்களின் மதிப்பீடு பணி முடித்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு பணி:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத காரணத்தினால் அனைத்து பாடத்திட்டத்திலிருந்தும் குறைந்தது 35 சதவீதம் வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இருந்தாலும்கூட மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு பொதுத்தேர்வு எழுதியதன் காரணத்தினால் பதட்ட நிலையிலேயே தான் தேர்வு எழுதினர்.
Exams Daily Mobile App Download
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களின் மதிப்பீட்டுத் தேர்ச்சி பணி முறையாக முடியாத காரணத்தினால் வரும் ஜூன் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் 23 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடத்திலும் கேள்விகள் மிக எளிமையாக கேட்கப்பட்டு இருந்தாலும்கூட மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவை எதிர்பார்த்து அச்சத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களின் மதிப்பீட்டுத் தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு வர வேண்டியதில்லை என பள்ளியில் இயக்குனர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நிலை ஆசிரியர்களும் வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு வர வேண்டியதில்லை என பள்ளிக் கல்வி ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.