தமிழகத்தில் ஜூலை 8 & 9 முக்கிய ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
கிண்டி ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில முக்கிய ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து :
தமிழகத்தில் போக்குவரத்து செலவு கம்மி என்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் கழிப்பறை வசதிகளுக்காகவும் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு சில இடங்களில் அதிகமான மழை போன்ற சில இடையூறு ஏற்படும் சமயங்களில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கிண்டி ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 8 மற்றும் ஜூலை 9 ஆம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். அதாவது, கிண்டி ரயில் நிலையத்தில் இரவில் இயக்கப்படும் 13 புறநகர் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? அமைச்சர் எச்சரிக்கை!
மேலும், சில ரயில்களுக்கு வரும் ஜூலை 8ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது மற்றும் இரவு 10.25 மணிக்கு புறப்படும் தாம்பரம்- சென்னை கடற்கரை புறநகர் ரயில் (40144) வரும் ஜூலை 8ம் தேதி பராமரிப்பு பணியின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், ரயில் பயணிகள் அனைவரும் எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.