தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் தொடர்ச்சியாக 2021 ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற இரு கொரோனா தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி பயன்பட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது காண முடிந்தது. அதனால் அரசு தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் தீவிரம் காட்டியது.
Exams Daily Mobile App Download
பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டதால் 3ம் அலை கொரோனா தாக்கம் அந்த அளவிற்கு இல்லை. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பினர். இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் பொது இடங்களில் தடுப்பு பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – குறைதீர் முகாம்!
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு பணியாக தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுத்தபடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியபட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கு மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தால் மட்டுமே ஊரடங்கு அவசியம். அதனால் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஊரடங்கு அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.