110 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா தொற்று – WHO எச்சரிக்கை!
உலகம் முழுவதும் உள்ள 110 நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது தொடர்பான சில அறிவுரைகளை WHO வழங்கியுள்ளது.
கொரோனா:
உலகம் முழுவதும் ஓமைக்ரான் தொற்று வகை வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 110 நாடுகளில் கோவிட்-19 பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அவ்வப்போது குறைந்தாலும் முழுமையாக கொரோனா தொற்றை ஒழிக்க முடிவதில்லை. அதாவது, BA.4 மற்றும் BA.5 வகை கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று அதிக இழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், உலக அளவில் பார்க்கும் பொது கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் தெரிவித்துள்ளார். இத்துடன், 3 கண்டங்களில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளும் வீதமும் குறைந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் இனி கிடையாது? கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
உலகம் முழுக்க கிட்டத்தட்ட 75 சதவீத சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டதன் காரணமாக மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு கோடி மக்கள் கொரோனா தொற்றிலிருந்து தப்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, இன்னும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாகவும் உடனே தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்