பழைய ஓய்வூதிய திட்டம் இனி கிடையாது? கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

0
பழைய ஓய்வூதிய திட்டம் இனி கிடையாது? கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் இனி கிடையாது? கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் இனி கிடையாது? கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மாநில அரசு, பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை கொண்டு வரவில்லை.

கடும் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்து வந்தது போல பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் கிடையாது.

Exams Daily Mobile App Download

இது போன்ற பல பலன்கள் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடையாது. இதனால் தான் ஊழியர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்ய தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலுக்கு முன்பாக, பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்களின் முழு ஆதரவும் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை பஞ்சாப் அரசு கொண்டு வரவில்லை.

ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் மாற்றுவதற்கான வழிமுறைகள்!

இதனால் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஜலந்தரில் அரசு ஊழியர் சங்கத்தினர், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை அரசு கொண்டு வராததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் தற்போது பஞ்சாப் நிதியமைச்சராக இருக்கும் ஹர்பால் சிங் சீமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். இந்நிலையில் அவரே தற்போது ஊழியர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!