இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் – மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நான்காம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் வந்துள்ளது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்வதே கொரோனாவை ஒழிக்க ஒரே வழியாக இருக்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கோர்பவேக்ஸ் தடுப்பூசியானது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக இதனை செலுத்தலாம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மத்திய அரசிடம் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்சை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 12ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ
அதனை தொடர்ந்து மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவாக்சின், கோவிஷீல்டு முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மூன்றாவது தவணையாக கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.