தமிழகத்தின் எந்தெந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 12ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
தஞ்சை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்திலேயே காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் பல கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலமாக கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு – தகவல் வெளியீடு
மேலும், 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இன்ஜினீரிங் என அனைத்து பட்டதாரிகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் கொண்டு வரும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக ஏதேனும் விவரங்கள் அறிய விரும்பினால் 04362 – 237037 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.