கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பொழிந்துள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவியுள்ளது.
வானிலை அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் நேற்று அதிகப்பட்சமாக 4 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபட்ட பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு 2024 – பொதுத்தமிழ் இலக்கணம்.. சூப்பர் கேள்விகள் விடையுடன்!!
மேலும் இன்று பெரும்பாலான வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும், இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.