வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு – இழப்பீட்டுத்தொகை ரூ.3.25 லட்சமாக உயர்வு!
ஜார்கண்ட் மாநிலத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத்தொகை:
வனவிலங்குகள் சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் போது எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வன விலங்குகளால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. பலர் காயமுறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மாநில அரசு வன விலங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுத்தொகை வழங்கி வருகிறது.
தற்போது இந்த இழப்பீட்டுத்தொகையை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பெரிய காயத்திற்கு ஆளாகுபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத்தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
கல்வி தொலைக்காட்சியை போல CBSEக்கு புது சேனல் – ஜூலை முதல் தொடக்கம்!
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இழப்பீட்டுத்தொகை ரூ. 3.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வனவிலங்குகள் ஏற்படுத்தும் சேதத்தால் உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 லட்சம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.