அக்னிபாத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசு தற்போது இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு விமானப் போக்குவரத்து சலுகைகள் வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அக்னிபாத் வீரர்:
இந்திய ராணுவத்தில் இதுவரைக்கும் நேரடி தேர்வின் அடிப்படையில் தான் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் வயது வரைக்கும் இந்திய ராணுவத்திலேயே வேலை செய்து கொள்ளலாம். ஆனால், தற்போது மத்திய அரசு அக்னிபாத் என்னும் ஒரு புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக இந்திய ராணுவத்தில் சேரும் ராணுவ வீரர்கள் நான்கு வருடங்கள் மட்டுமே இந்திய ராணுவத்தில் பணியாற்ற முடியும்.
Exams Daily Mobile App Download
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தகுதியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மட்டுமே நிரந்தரமாக 15 வருடங்கள் வரைக்கும் பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திட்டத்தை கைவிடும்படி பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், ரயில்களை கொளுத்துவதுமாக மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்வு!
இதனால் சில குறிப்பிட்ட மாநிலங்கள் முழுக்க பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், அதிகத் திறன் கொண்ட அக்னிபாத் வீரர்களுக்கு மேலும் சில சலுகைகளும் வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.