தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது அப்படி என்னதான் பழைய ஓய்வூதிய திட்டத்தில் பலன்கள் கிடைக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான பலன்கள் கிடைப்பதால் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Exams Daily Mobile App Download

அத்துடன் இது தொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தில், சேமிப்பு தொகையில் இருந்து தேவைப்படும் போது கடனாக எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடையாது. அரசு ஊழியர்கள் பணி நிறைவடைந்த பிறகு கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை கொடுத்துவிட்டால் அதன் பின்னர் எதுவும் கிடைக்காது.

அக்னிபாத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில்,

1. மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் அந்த ஓய்வூதிய தொகை அவரது கணவன் அல்லது மனைவிக்கு மாதந்தோறும் 50% பென்சன் தொகை வழங்கப்படும்.

2. அத்துடன் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதியில் பணிக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை, பணி ஓய்வு பணிக்கொடை உள்ளிட்டவை பெற முடிகிறது.

3. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் போது பென்சன் தொகையும் உயரும்.

4. பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக 50,000 ரூபாய் வரை பெறலாம். ஆனால் இந்த பலன்கள் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை.

5. மேலும் 80 வயதுக்கு மேல் உயிரோடு இருப்பவராக இருப்பின் கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை அதிகரிக்கப்படும். ஆனால் இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை.


6. அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக பெற முடியும். அத்துடன் ஊழியர் 7 ஆண்டுகளுக்கு பின் பணியில் இருக்கும்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக பெற முடியும்.

7. பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்தோறும் மருத்துவப் படியாக ரூ.300 வரை கிடைக்கிறது. இது பங்களிப்பு பென்சன் திட்டத்தில் பெற முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!