தமிழக மக்களே உஷார்…இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் வளி மண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இப்பகுதிகளில் வளி மண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் வளி மண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 28 முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
வீடுகளில் ஆபரண தங்கத்தை வைத்துள்ளீர்களா? உங்களுக்கான வரம்பு இது தான்.. விவரங்கள் இதோ!
Exams Daily Mobile App Download
ஆனால் வருகிற 31ம் தேதி அன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் இன்று கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.