தமிழக பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா – விருதுகள் அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கலைத்திருவிழா:
தமிழக அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான அடுத்த கட்ட மாநில அளவிலான போட்டிகள் இன்று (டிச.27) முதல் துவங்கியுள்ளது. இந்த போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய இப்போட்டியானது வரும் 30ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே உஷார்…இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
தற்போது நடைபெற்று வரும் இந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 2023 ஜனவரி 12 ஆம் தேதி அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலையரசன், கலையரசி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.