சாந்தி முகூர்த்தத்தை தள்ளி வைக்கும் பாண்டியன்.. கடுப்பில் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில், கோமதியை மீனா கைக்குள்ளே வைத்து கொண்டு கதிரை வீட்டிற்குள்ளே வர வைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிரை கோமதியை வைத்து வீட்டிற்குள் அழைத்து வருகிறார் மீனா. அதை பார்த்து பாண்டியனுக்கு கோவம் வந்தாலும், கோமதி அழுது பாண்டியனை சமாதானம் செய்கிறார். சரி என பாண்டியனும் கதிரை வீட்டிற்குள் வர சம்மதிக்கிறார். ஆனால் பாண்டியன் மீனாவிடம் சரவணனிற்கு கல்யாணம் ஆகும் வரை சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என சொல்கிறார்.
தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
அது மீனாவிற்கு பிடிக்காமல் இருக்க, சாந்தி முகூர்த்தம் நடக்க வேண்டும் என மீனா செந்திலிடம் பிடிவாதம் பிடிக்கிறார். உடனே சாந்தி முகூர்த்தம் நடந்துவிட இந்த விஷயம் மூர்த்திக்கு தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் புது பிரச்சனை வர இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் சரவணனிற்கு யாருடன் திருமணம் நடக்கும் என்பதும் பெரிய திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.