வாணியம்பாடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் ஆலோசனை!!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் பிப்ரவரி 13ம் தேதி வாணியம்பாடியில் நடைபெற உள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 13ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இதில் 120க்கும் மேற்பட்ட தனியார் துறை தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றது.
தமிழகத்தில் புதிதாக 246 ஐ.டி பூங்காக்கள் – 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!!
முன்னேற்பாடு பணிகள்:
நடக்க இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகளுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், பரமேஸ்வரி மற்றும் வேலைவாய்ப்பு துறையினை சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
காமராஜர் கல்வி உதவித்தொகை பெற பொருளாதார அளவுகோல் – ஆளுநர் உத்தரவு!!
ஆலோசனை கூட்டம்:
ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் அவர்கள் பேசுகையில், முகாமுக்கு அதிக அளவிலான வேலை தேடும் நபர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தகவல்களை களப்பணியாளர்கள் மூலம் தகவல் தெரிவித்தல், வேலைதேடும் நபர்கள் இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேறகொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்