மத்திய அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு – 21 புதிய பிரிவுகள் இணைப்பு!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு நடைமுறையில் புதிதாக 21 பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
அரசு பணிகளில் ஒதுக்கீடு:
இந்திய இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்றாக போட்டித் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள், சிறப்பு இடஒதுக்கீடு போன்றவை நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதைப்போன்று மத்திய அரசின் பணிகளில் விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் புதிதாக 21 துறைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
வாணியம்பாடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் ஆலோசனை!!
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் பாடிபில்டிங், வாள்சண்டை, சைக்கிள் போலோ, பேஸ்பால் உள்ளிட்ட 21 புதிய பிரிவுகள் விளையாட்டு துறையினருக்கான பணியிட ஒதுக்கீட்டில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் மத்திய அரசின் துறைகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள ‘சி’ பிரிவு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்கான தகுதி உடையவர்கள் என கூறப்பட்டு உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகம் பிறந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்