தமிழகத்தில் புதிதாக 246 ஐ.டி பூங்காக்கள் – 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!!
பிக்கி ஆண்டு மாநாடு:
தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரழிவு மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் நேற்று சென்னையில் நடந்த பிக்கி ஆண்டு மாநாட்டில் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர், கொரோனா காலத்தில் ஐ.டி துறையின் செயல்பாடுகள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஐ.டி துறையில் நடந்துள்ள ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் பற்றி மாநாட்டில் பேசினார். மாநாட்டில் அமைச்சர் பேசிய தகவல்கள் பின்வருமாறு, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை!!
பல கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஐ.டி., துறையில் பெறப்பட்டது. அலைபேசி, எல்.இ.டி., சிப், மெடிக்கல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மதிப்பு கூட்டப்பட்டு சேவையளிக்க தமிழகம் ஆர்வம் காட்டுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படாமல் இருக்க எக்கோ பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம்!!
தமிழகத்தில் புதிதாக 246 ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், மதுரையில், பார்வையற்றவர்களுக்கு அரசின் இலவச அலைபேசிகளையும் வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் அமைச்சருடன் இருந்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்