ஒரே நேரத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தில் அரங்கேறும் இரண்டு திருமணங்கள் – ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியலட்சுமி தொடரில் ஒரே நேரத்தில் கோபி- ராதிகா, எழில்- அமிர்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு நடுவே என்னென்ன பிரச்சனை வரப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் வீட்டிலும் நடைபெறும் நிகழ்வுகளை படம் போட்டுக் காட்டி கொண்டிருப்பதால் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எப்படி ஒரு அப்பாவி பெண்ணை இந்தளவுக்கு ஏமாற்றலாம் என ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் கூடிய விரைவில் கோபி- ராதிகா, எழில்- அமிர்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அமிர்தாவுக்கு எழில் மீது காதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதாவது எழிலுடன் இருக்கும்போது அமிர்தா பாதுகாப்பாக உணருகிறார். கூடிய விரைவில் எழிலிடம் காதலிக்கும் விஷயத்தை கூறப் போகிறார். ஆனால் கோபியின் கதை மிகவும் வித்தியாசமானது. கணவன் மட்டுமே உலகம் என்று நினைத்து வாழும் பாக்கியாவை கோபி ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!
எனது மனைவி என்னை கவனித்துக்கொள்ள மாட்டாள் அவளுக்கு நான் வேலைக்கு சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே போதும். என்னை ஒரு மனுஷனாகவே மதிக்க மாட்டார்கள் என கண்டபடி பொய் சொல்லித் தான் ராதிகாவின் மனதில் கோபி இடம் பிடித்தார். சொல்லப் போனால் கோபி பாக்கியாவிற்கும் உண்மையாக இல்லை, ராதிகாவிற்கும் உண்மையாக இல்லை. கோபி குறித்தான அனைத்து உண்மைகளும் வெளியே வரும் போது கோபி நடுத்தெருவில் தான் நிற்கப் போகிறார். கூடிய விரைவில் அந்த எபிசோட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.