விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!

விஜய் டிவியில் நல்ல போயிட்டு இருக்கும் ராஜா ராணி 2 சீரியல் குடும்பத்தில் எதிர்பாராத பூகம்பம் வெடிக்க போகும் அளவுக்கு அடுத்து வரக்கூடிய எபிசோட் காட்சிகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.

அடுத்து நடக்கப்போவது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் சீரியல் ராஜா ராணி 2 வைத்து பாகம் ஓரளவு வரவேற்பை பெற்று வந்தாலும் முதல் பாகத்தில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் சேர்ந்து நடித்த ராஜா ராணி சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டு முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா மற்றும் கலர்ஸ் டிவி திருமணம் சீரியலில் நடித்த சித்து ஆகியோர் நடித்து வந்தனர். சமீபத்தில் ஆல்யா மானசா பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக புது மாடல் அழகி ரியா நடித்து வருகிறார். அவர் வந்த நேரம் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அதாவது சந்தியா மாமியாரை பொறுத்தவரை தனது மருமகள் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும், எனது மகனுக்கு நல்ல மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு நல்ல அண்ணியாகவும் இருக்க வேண்டும் என்பது தான் ஆசை ஆனால் திருமணமாகி இத்தனை வருடங்களுக்கு பிறகு தனது மனைவி சந்தியாவின் ஆசை போலீஸ் அதிகாரி ஆவது என்பதை அறிந்து கொண்ட கணவர் சரவணன் அவளின் ஆசையை நிறைவேத்த பல முயற்சிகள் எடுத்து வந்தார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் சந்தியா இருவரும் தென்காசியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் மற்றவர்களை காப்பாற்றிய காட்சிகள் ஒளிபரப்பாகியது.

அதை குறித்த செய்தி தற்போது நியூஸ் பேப்பரில் வர அதை சரவணனின் அப்பா சத்தமாக படித்து திடீரென அது சரவணன் சந்தியா என்று தெரிந்ததும் படிப்பதை பாதியில் நிறுத்தி விடுகிறார். இதை கவனித்த சரவணனின் தம்பி பேப்பரை வாங்கி பார்க்கிறார். எப்படியும் சரவணனின் தம்பி இதை சிவகாமியிடம் சொல்லாமல் இருக்க மாட்டார். அப்படி சொல்லும் போது நீங்கள் இருவரும் தென்காசிக்கு எதற்காக போனீங்க என்று சிவகாமி கேட்க, கூடவே அர்ச்சனாவும் சேர்ந்துகொள்வார். இதிலிருந்தே தெரிகிறது சந்தியாவும், சரவணனும் போர்க்களத்துக்கு ரெடி ஆகணும் என்று. மேலும், சிவகாமிக்கு பேச சொல்லியா தரணும்! போச்சு அடுத்த பஞ்சாயத்து காத்திட்டு இருக்கு. அடுத்து என்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!