முதல்வர் காப்பீடு திட்டம்… முகாம் தேதி மாற்றம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்ட அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
முதல்வர் காப்பீடு அட்டை:
தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல்வர் காப்பீடு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 1.2 0 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் வரையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே திட்டத்தில் சேர முடியும்.
ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாட்ஸ்அப் Privacy அப்டேட்கள் – முழு விவரங்களுடன்!!
இதனால் புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையும் வகையில் நவம்பர் 18ஆம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை பள்ளி வேலை நாளாகவும், அரசு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் காப்பீடு திட்ட அட்டைக்கான சிறப்பு முகாம் டிசம்பர் 2ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.