அண்ணாமலை உயிருக்கு வந்த ஆபத்து.. பழி சுமத்தப்படும் மீனா – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், மீனா சமைத்துவிட்டு வெளியே செல்ல அதில் பல்லி விழுந்து விடுகிறது. அதனால் மீனா மீது பழி விழ அதில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா சாப்பாடு செய்து வைத்துவிட்டு வெளியே செல்கிறார். அப்போது பார்வதி வர விஜயா அவருக்கு சாப்பாடு வைத்து கொடுக்கிறார். சாப்பாட்டை மூடாமல் வைத்துவிட, அப்போது அதில் பல்லி விழுந்துவிடுகிறது. அண்ணாமலை சாப்பிட அமர, முத்துவும் சாப்பிட வருகிறார். முத்து சாப்பாடு வைக்க அதில் பல்லி கிடக்கிறது. முத்து அண்ணாமலையை சாப்பிடவிடாமல் செய்கிறார்.
ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாட்ஸ்அப் Privacy அப்டேட்கள் – முழு விவரங்களுடன்!!
அப்போது விஜயா, இதனை மீனா வேண்டும் என்றே செய்தது போல பேசுகிறார். ஆனால் மீனா நான் மூடி வைத்துவிட்டு சென்றதாக சொல்கிறார். இந்நிலையில் இதே சாப்பாட்டை விஜயா சாப்பிட்டதாக சொல்ல, அப்போ அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என மீனா கேட்கிறார். முத்து தவறு செய்ததை உணர்ந்து மீனாவின் நல்ல மனதை புரிந்து கொள்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.