தமிழகத்தில் டிச. 17ஆம் தேதி வரை மழைக்கு பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிச.17 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மக்கள் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டும் வரும் நிலையில், தற்போது வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற டிச. 17 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!!
இது குறித்து வெளியான அறிக்கையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிச. 17 ஆம் தேதி வரை இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும், வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை 38செ.மீ பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.