TNPSC தேர்வுகள் நடைபெறுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!! குழப்பத்தில் தேர்வாணையம்!!
TNPSC தேர்வுகளை அறிவிக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களே காலியாக இருப்பதால் தேர்வு நடைபெறுமா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தகுதித்தேர்வுகள் நடத்தி அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் முறையாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர். அதாவது, என்.பி.எஸ்.சி., செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, 14 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் முன்னிலையில் தான் TNPSC தேர்வுகள் நடத்தப்படுகிறது.
TNPSC தேர்வுகள் 2023-24… பாஸ் ஆக வேண்டுமா?? இதை பாருங்க!!
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பணியிடங்களும், 6 மாதங்களாக தலைவர் பதவியும் காலியாக உள்ளது. இதனால் தான் TNPSC தேர்வுகள் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் TNPSC தேர்வுகள் நடைபெறும் என தேர்வர்கள் நம்பிக்கையில் இருக்கும் நிலையில் உண்மையில் TNPSC தேர்வு நடைபெறுமா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.