தமிழக அரசின் பொங்கல் வேட்டி சேலைகள் – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் அடுத்த மாத இறுதிக்குள் வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். ஏழை மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
இதில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின் வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.