உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0

உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்:

தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 50% வரையிலும் உயர்த்தப்பட்டது. அதாவது, தேர்வு கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.225 ஆகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆகவும், ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.600லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

ஒரே நேரத்தில் அனைத்து தேர்வு கட்டணமும் உயர்த்தப்பட்ட நிலையில் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்தை செலுத்தினால் போதுமானது எனவும், அடுத்த கல்வியாண்டில் தேர்வு கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!