அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மீள் பயிற்சி வகுப்புகள் நாளை (ஏப்ரல் 3) நடைபெற உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளில் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டங்களாக நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட அறிவிப்பின்படி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
இந்நிலையில் நாளை தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான மீள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.