நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது புனே பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
இந்தியாவில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் முதல் கொரோனா பரவல் மிக அதிகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. இதற்காக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் மக்களை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறையினரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மிக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே மராட்டிய மாநிலம் புனேவில் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதனால் அங்கு பல தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளனர். கொரோனா பரவல் தற்போது புனேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புனேவில் நாளை (ஏப்ரல் 3) முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரிவிலக்கு – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
இதனால் பார்கள், உணவகங்கள் என அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டோர் டெலிவரி சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு நிலவரம் மிக தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்