தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (03.04.2021) விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி 234 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் 4024 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் முன்னணி அரசியல் கட்சியினர் வீதியில் இறங்கி மக்களை சந்தித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஒரு பக்கம் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நாளை (03.4.2021) மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. ஆகையால் இது குறித்த சுற்றறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக தேர்தல் பணிக்கான 3ம் கட்ட பயிற்சி வகுப்புகள் – தேதி அறிவிப்பு!!
அதில், “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மூன்றாவது பயிற்சி வகுப்புகள் நாளை (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது. அந்த பயிற்சி வகுப்புகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.