தமிழக அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – செப். 15ம் தேதி துவக்கம்!

0
தமிழக அரசு பள்ளிகளில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் - செப். 15ம் தேதி துவக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் - செப். 15ம் தேதி துவக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – செப். 15ம் தேதி துவக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 15ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல 1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வந்ததது. இந்த நிலையில் அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக தற்போது அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காலை உணவு திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,14,095 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மக்களே புதிய வகை உணவுகளை ருசிக்க ரெடியா? முழு விவரம் இதோ

இதில் சென்னையை பொறுத்தவரை 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவு தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்குவதில் பல்வேறு சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் பள்ளி கல்வி துறை அதிகாரிகளும், என்ஜினீயர்களும் சமையல் கூடம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் 6 இடங்களில் காலை உணவை தயாரித்து வழங்குவதற்கு உகந்த இடம் ஆய்வு செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!