உதகை மண்டலத்தில் ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை – தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!

0
உதகை மண்டலத்தில் 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை - தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!
உதகை மண்டலத்தில் 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை - தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!
உதகை மண்டலத்தில் ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை – தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் உதகை மண்டலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்துள்ளது.

ரெட் அலர்ட்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து கொண்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று ஆரஞ்சு அலர்ட், நாளை ரெட் அலர்ட் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகையில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை துரிதமாக சீரமைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க மரங்களுக்கு கீழ், ஆறுகள் மற்றும் தடுப்பு சுவரின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழக அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – செப். 15ம் தேதி துவக்கம்

இதனை தொடர்ந்து நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இம்மாவட்டத்திற்கு 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை புரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உதகையை வந்தடைந்துள்ளது. அதனால் இப்பகுதியில் பாதிப்பு ஏற்படாதவாறு தேசிய பேரிடர் மீட்புப் படை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!