சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த அரசாணை – தமிழக அரசு வெளியீடு!
தமிழகத்தில் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
சிங்கார சென்னை:
தமிழகத்தின் தலைமையிடமாக திகழும் சென்னை மாநகராட்சி பலருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. சென்னை சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. அத்தகைய சிறப்பம்சம் கொண்ட சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்ற சிங்கார சென்னை 2.0 திட்டம் அமல்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!
இதை சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி இணைந்து செயல்படும் என்று திட்ட ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரத்தின் மேயராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்த போது, சென்னையை அழகுபடுத்தும் நோக்கத்தோடு சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய ஆலோசனை!
சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக சுவரொட்டிகள் இல்லாத மாநகரமாக உருவாக்க வேண்டும் என்று அடுத்தடுத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், வேறு பல திட்டங்களை இணைத்து உள்கட்டமைப்பு பணிகள், சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு தமிழக அரசின் காகிதமில்லா பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.