அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான சரிவை கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.29) மாலை விற்பனையிலும் அதிரடியான வீழ்ச்சியை கண்டுள்ளது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.32 வரை குறைந்து விற்பனையாகிறது.
மாலை விற்பனை
தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது. அதாவது கொரோனா பேரலை காரணமாக கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் நகைகளின் விற்பனையும் முழுமையாக நிறுத்தப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை – கொந்தளிக்கும் மக்கள்!
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அளிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் நகைக்கடைகள் அனைத்தும் தற்போது மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. அதே நேரத்தில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக சரிவை கண்டு வருவதால் வாடிக்கையாளர்கள் சற்று மன நிம்மதியுடன் ஆபரணத் தங்க நகைகளை வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுத்துறை!
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 29) மாலை நேர விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது எதிர்பாராத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 வரை குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,349க்கு விற்பனையாகிறது. இதே நேரத்தில் ஒரு சவரன் நகையும் ரூ.34,792 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.