தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுத்துறை!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வு துறை இயக்கம் நாளை (30.09.2021) மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தபட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் வகுப்புகள் தடையின்றி நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை – கொந்தளிக்கும் மக்கள்!
அதே போல நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் பொதுத் தேர்வுகளை நடத்த முடியவில்லை. அதன் எதிரொலியாக அரசு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடபட்டது. அதே போல 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை – UIDAI அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்கள் மேல்நிலை வகுப்பு சேருவதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 30.09.2021 அன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் 01.10.2021 அன்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும். அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.