தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை – கொந்தளிக்கும் மக்கள்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை குறித்து மக்கள் திமுக வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுக:
நடந்து முடிந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் முதல் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை – UIDAI அறிவிப்பு!
தற்போது தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் ஆளும் கட்சி வேட்பாளர்களிடம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதாக கூறி வருகின்றனர். அதற்கு திமுக வேட்பாளர்கள் தமிழக அரசு தகுதியான குடும்ப அட்டைதாரர்களை அடையாளம் கண்டு வருவதாக திமுக வேட்பாளர்கள் கூறி வருகின்றனர்.
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – மாநில அரசு முடிவு!
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நேரத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்காவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் மக்களை சந்திக்கும் போது மக்களின் கேள்விகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என திமுக வேட்பாளர்கள் கூறி வருகின்றன. தேர்தல் முடிந்த பின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.