அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – மாநில அரசு முடிவு!

0
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு - மாநில அரசு முடிவு!
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு - மாநில அரசு முடிவு!
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – மாநில அரசு முடிவு!

கொரோனா 2ம் அலை தொற்று சூழலுக்கு மத்தியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தையும் வரும் அக்டோபர் 1ம் முதல் ஒரே கட்டமாக திறக்க அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கல்லூரிகள் திறப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் உயர்நிலை, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்காக நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கின. அதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 20 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – சிலிப் இல்லாதவர்களும் ஓட்டு போட அனுமதி!

அதன் படி அனைத்து வகுப்புகளும் முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் வருகை என்பது கட்டாயமில்லை என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் திறக்கப்படாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – துணைநிலை ஆளுநர் விளக்கம்!

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நாளில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 2 சதவிகிதத்தை மீறினால் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு மாவட்ட துணை ஆணையருக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு பிரிவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் தினசரி நடைபெறும். குறிப்பாக கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்திருப்பது கட்டாயமாகும். அதே நேரத்தில் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பள்ளிகளின் ஊழியர்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!