தமிழகத்தில் மழை வருமா? இன்றைய வானிலை அறிக்கை இதோ!

0
தமிழகத்தில் மழை வருமா? இன்றைய வானிலை அறிக்கை இதோ!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.

வானிலை அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8″ செல்சியஸ், சேலத்தில் 41.7″ செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், தர்மபுரியில் 40.7 செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0′ செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை TCS ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். மேலும் அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!