தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 20201-2022ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்குவதாக அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அபாயத்தினால் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் பாடப்புத்தகங்கள் பெறுவதற்கு என்று மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!
இதனால் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டது. அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுத்துறை!
இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வி இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.