தமிழகத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் – வங்கி, நிதிநிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்க உத்தரவு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை,கொள்ளை,திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலோசனை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை,திருட்டு, வழிப்பறி போன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஆன்லைன் மயமாகி விட்டதால் மக்கள் வங்கிகளுக்கு செல்வதில் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஏடிஎம் வாயிலாக பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் பண திருடு போதல், ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மோசடி கும்பல் வங்கி ஊழியர்களை போல பேசி கணக்கு விவரங்களை கைப்பற்றி பணம் கையாடல் செய்து விடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், நகைக் கடைகள் போன்றவற்றில் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்தபட்டது. இக்கூட்டத்திற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 25ம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் – அமைச்சர் தகவல்!
தர்மபுரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.