தமிழகத்தில் ஜூன் 25ம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 25ம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கத்தோடு தனியார் துறைகள் மூலம் சில வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வரும் இந்த வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 25ம் தேதியன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து அவர் கூறும் போது, ‘தமிழகத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வரும் 25ம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற இருக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் படித்த இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களின் திறமைக்கு ஏற்றபடி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு – டெபாசிட் தொகை உயர்வு! மக்கள் அதிருப்தி!
இப்போது இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதே நேரத்தில் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக போதிய பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.