நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்வு – மத்திய அரசின் நடவடிக்கை!

0
நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்வு - மத்திய அரசின் நடவடிக்கை!
நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்வு - மத்திய அரசின் நடவடிக்கை!
நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்வு – மத்திய அரசின் நடவடிக்கை!

நாட்டில் சமீபகாலமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விலை உயர்வு:

சமீப காலமாக நாட்டில் அரிசி, கோதுமை, எண்ணெய் வகைகள், அரிசி மற்றும் காய்கறிகளின் விலை ஆனது பல மடங்கு விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் அரசின் மீது அதிருப்தி நிலையில் உள்ளதால் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கோதுமை பதுக்கலை தவிர்க்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் கோதுமை கையிருப்பை மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது. வரம்புக்கு மீறிய பதுக்கல்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதி வேகத்தில் படையெடுக்கும் கொரோனா தொற்று – மீண்டும் ஊரடங்கா? மக்கள் அச்சம்!!

இதேபோல் நாட்டில் வெங்காய விலை உயர்வை தடுக்கும் வகையில் மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வகையான பருப்பு வகைகளையும் இலவசமாக இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கையிருப்பு வரம்புகளை அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!