அதி வேகத்தில் படையெடுக்கும் கொரோனா தொற்று – மீண்டும் ஊரடங்கா? மக்கள் அச்சம்!!
மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்கிற அச்சம் நிலவி வருகிறது.
கொரோனா:
சீனா நாட்டில் கடந்த 2019ம் ஆண்டில் பரவ துவங்கிய கொரோனா தொற்று அனைத்து நாட்டு மக்களையும் பெரிதளவில் பாதித்தது. தமிழகத்திலும் மூன்று அலைகளை தாண்டி தற்போது எந்தவித தொற்றும் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 32,035 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண பலாத்காரம் குற்றம் அல்ல – உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
இதனால், நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், சிங்கப்பூரில் இருந்து பிற நாடுகளுக்கும் தொற்று பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஓரிரு வாரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.